எருமப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் சாவு


எருமப்பட்டி அருகே  மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் சாவு
x
தினத்தந்தி 21 Oct 2022 6:45 PM GMT (Updated: 21 Oct 2022 6:45 PM GMT)

எருமப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் சாவு

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரன்பட்டி அரசமர தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 30). இவர் எருமப்பட்டி தனியார் ஏஜென்சி மூலம் வரகூர் மின்வாரியத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் பவித்திரம் புதூர் ஊராட்சி தோட்டமுடையான்பட்டி கிராமத்தில் மின்கம்பத்தில் ஜம்பர் வயரை மாற்றி கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர் மின்சாரம் அவரை தாக்கியது. இதில் மயக்கம் அடைந்த செந்தில்குமார் மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரை மீட்டு பவித்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செந்தில்குமார் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த செந்தில்குமாருக்கு காயத்ரி என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story