புதுச்சத்திரம் அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவி சாவு


புதுச்சத்திரம் அருகே  வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
x
தினத்தந்தி 26 Oct 2022 6:45 PM GMT (Updated: 26 Oct 2022 6:45 PM GMT)

புதுச்சத்திரம் அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவி சாவு

நாமக்கல்

புதுச்சத்திரம் அருகே உள்ள செம்மாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிரபா (வயது 14). இவர் குருசாமிபாளையம் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அங்குள்ள சீதன வாய்க்காலுக்கு துணி துவைக்க பிரபா சென்றார்.

பின்னர் துணியை அலச 6 அடி பள்ளத்தில் அவர் இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது பிரபா திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரபாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story