திருச்செங்கோடு அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி நகை தொழிலாளி சாவு டிரைவர் கைது


திருச்செங்கோடு அருகே  லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி நகை தொழிலாளி சாவு  டிரைவர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2022 6:45 PM GMT (Updated: 28 Oct 2022 6:47 PM GMT)

திருச்செங்கோடு அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி நகை தொழிலாளி சாவு டிரைவர் கைது

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் நகை தொழிலாளி இறந்தார். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

நகை தொழிலாளி

பெரம்பலூர் மாவட்டம் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் சற்குணம் (வயது 50). நகை தொழிலாளி. இவருடைய மனைவி கீதா. இவர்கள் 2 பேரும் நேற்று சுந்தராபுரத்தில் இருந்து ஈரோடு அருகே சிவகிரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் ராயர்பாளையம் அருகே வெங்கமேடு பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு சற்குணம் படுகாயம் அடைந்தார். கீதாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது.

டிரைவர் கைது

இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் கணவன், மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சற்குணம் இறந்தார். கீதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த அண்ணாதுரை (52) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story