பரமத்திவேலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


பரமத்திவேலூர் அருகே  தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:47 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா கரட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாப்பான் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாப்பான் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டார். இதை அறிந்த குடும்பத்தினர் பாப்பானை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பான் இறந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story