பரமத்தி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை


பரமத்தி அருகே  விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

பரமத்தி அருகே உள்ள கரட்டுப்பாளையம் இச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58) விவசாயி. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் மனமடைந்த நிலையில் இருந்து வந்த சுப்பிரமணி நேற்று அதிகாலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் சுப்பிரமணியை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விசாரணை

பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story