நாமகிரிப்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு


நாமகிரிப்பேட்டை அருகே  கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:47 PM GMT)
நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வேடிச்சி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் அங்கு தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த பகுதியில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதற்காக அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கும்பம் கரைப்பதற்காக கிணற்றுக்கு சென்றனர். வேடிச்சியும் கும்பம் கரைப்பதற்காக கிணற்றுக்கு சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அந்தசமயம் இதனை யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து உடல் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் வேடிச்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story