பரமத்திவேலூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி சாவு


பரமத்திவேலூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி சாவு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 9:59 AM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாலுகா அலுவலகம் அருகே நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.

அந்த சமயம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பரமத்திவேலூர் போலீசார் பலியான பெரியசாமியின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான ஓசூர் பகுதியை சேர்ந்த சுந்தரேசபாபு (59) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story