தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

பாப்பாரப்பட்டி:
நல்லம்பள்ளி அருகே உள்ள பொடாரன் கொட்டாய்பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 68). இவர் கடந்த 15-ந் தேதி பாப்பாரப்பட்டி அருகே வேடிக்கொட்டாயில் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிப்பதற்காக ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலு இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





