ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் சாவு


ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் சாவு
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 5:31 AM GMT)
தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயர் இறந்தார்.

என்ஜினீயர்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வெங்கட்டரெட்டி பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாசர் ரெட்டி. இவருடைய மகன் மணிகண்ட ரெட்டி (வயது 22). என்ஜினீயர். இவர் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி மணிகண்ட ரெட்டி தனது நண்பர்கள் 15 பேருடன் கார் மற்றும் சுற்றுலா வேனில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் ஆலம்பாடி பரிசல் துறை பகுதிக்கு சென்று காவிரி ஆற்றில் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர்.

விசாரணை

அப்போது மணிகண்ட ரெட்டி ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் மணிகண்டரெட்டி தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் மணிகண்ட ரெட்டி உடலை தேடினர். இதையடுத்து மணிகண்ட ரெட்டியின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் மணிகண்ட ரெட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story