பள்ளிபாளையத்தில்லாரியில் தவறி விழுந்து விசைத்தறி தொழிலாளி பலி


பள்ளிபாளையத்தில்லாரியில் தவறி விழுந்து விசைத்தறி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 13 Feb 2023 7:00 PM GMT (Updated: 13 Feb 2023 7:00 PM GMT)
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் ஆர்.எஸ்.ரோடு குட்டமுக்கு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு மாதேஷ் (19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மாதேசுக்கும், அவருடைய உறவினர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் தகராறு முற்றவே அவர்களுக்குள் மோதல் உண்டானது. அப்போது வெங்கடேசன் மோதலை விலக்க முயன்றார். அந்தசமயம் அந்த வழியாக வந்த லாரியில் எதிர்பாராதவிதமாக வெங்கடேசன் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story