ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு


ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 10 March 2023 7:00 PM GMT (Updated: 10 March 2023 7:01 PM GMT)
தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்தார்.

பாலிடெக்னிக் மாணவர்

தர்மபுரி அருகே உள்ள நீலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் முகேஷ் (வயது 19). தர்மபுரி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முகேஷ் குடும்பத்தினருடன் தனது தாத்தாவின் 3-ம் மாத இறப்பு காரியத்திற்காக ஒகேனக்கல்லுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் முதலை பண்ணை அருகே உள்ள ஏத்தமடுவு காவிரி ஆற்றில் குளித்தனர்.

அப்போது முகேஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

விசாரணை

இதுகுறித்து முகேசின் தாய் சத்யா ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிலரின் உதவியுடன் முகேைச இறந்த நிலையில் உடலை மீட்டனர். அப்போது முகேசின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் போலீசார் முகேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story