பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில்பிறந்த 6 நாளில் பெண் சிசு திடீர் சாவு

பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவருடைய மனைவி சித்ரா (வயது 25). இவருக்கு கடந்த 17-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய், சேய் பர்கூர் அரசு மருத்துவமனையிலேயே இருந்து வந்தனர். பிறந்து 6 நாட்கள் ஆன நிலையில் நேற்று முன்தினம் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென இறந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





