கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு

மத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பக்கிரிபாளையம் அருகே உள்ள பள்ளிப்பட்டி சாலையை சேர்ந்தவர் சென்ன கிருஷ்ணன். இவருடைய மகன் ஆதவன் (வயது 19). கட்டிட தொழிலாளி. இவர் திருவண்ணாமலை- பெங்களூரு சாலையில் அந்தேரிப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஆதவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆதவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





