மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 April 2023 12:30 AM IST (Updated: 10 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்திகிரி:

ஓசூர் தாலுகா சென்னத்தூர் அருகே உள்ள சானசந்திரம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முகமது கான் (வயது 24). தொழிலாளி. இவர் கொத்தூரில் நாதன் நகரில் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் அவரின் கைபட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story