தர்மபுரி அருகேரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை


தர்மபுரி அருகேரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 April 2023 12:30 AM IST (Updated: 16 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி குமாரசாமிபேட்டை அருகே ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. அதன் அருகே நேற்று ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 50 வயது மதிக்கத்தக்க ஆண் அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தர்மபுரி ரெயில்வே போலீசார் அவர் எதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story