வாகனம் மோதி பெண் பலி


வாகனம் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 19 April 2023 7:00 PM GMT (Updated: 19 April 2023 7:00 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் அண்ணா நகர் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் நடந்து சென்ற பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்திவேலூர் போலீசார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பினர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story