பரமத்திவேலூர் அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு


பரமத்திவேலூர் அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 19 April 2023 7:00 PM GMT (Updated: 19 April 2023 7:01 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவருடைய மகன் சரவணன் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் வீட்டுக்கு வராததால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது கள்ளிப்பாளையம் பகுதியில் சரவணன் இறந்து கிடப்பதாக பெற்றோருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற பெற்றோர் இறந்து கிடந்தது தங்களது மகன் தான் என்பதை உறுதி செய்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் சரவணன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story