சூளகிரி அருகேமழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு


சூளகிரி அருகேமழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு
x
தினத்தந்தி 29 April 2023 7:00 PM GMT (Updated: 29 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.

வாலிபர்

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ரமேஷ் பாலாஜி (வயது 32).

இவர் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி ரமேஷ் பாலாஜி மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

விசாரணை

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி ரமேஷ் பாலாஜி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.

இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து அவருடைய உறவினர் குமார் என்பவர் சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story