மொரப்பூர் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்றபோதுரெயில் மோதி வாலிபர் சாவு

மொரப்பூர்:
மொரப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி வாலிபர் இறந்தார்.
வாலிபர் உடல்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தொங்கனூர் ரெயில் நிலையத்தில் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை துண்டாகி இறந்து கிடந்தார்.
இதை பார்த்தவர்கள் உடனடியாக மொரப்பூர் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மொரப்பூர் ரெயில்வே இருப்பு பாதை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணை
அதில் இறந்து கிடந்த வாலிபர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிரே வந்த ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது. பின்னர் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.






