அரூர் அருகேபிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலைபோலீசார் விசாரணை


அரூர் அருகேபிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலைபோலீசார் விசாரணை
x
தினத்தந்தி 24 May 2023 7:00 PM GMT (Updated: 24 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே பிளஸ்- 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளஸ்-1 மாணவி

அரூர் அருகே உள்ள எல்லப்புடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திதாசன். தொழிலாளியான இவருடைய மகள் தமிழினியாள் (வயது 16). அரூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார். கோடை விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த தமிழினியாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தற்கொலை

இதைத்தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழினியாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழினியாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story