'தினத்தந்தி'- எக்ஸல் இணைந்து நடத்தும்'வெற்றி நிச்சயம்' வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஈரோட்டில் நாளை மறுநாள் நடக்கிறது


தினத்தந்தி- எக்ஸல் இணைந்து நடத்தும்வெற்றி நிச்சயம் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஈரோட்டில் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 22 April 2023 9:13 PM GMT (Updated: 23 April 2023 4:48 AM GMT)

'தினத்தந்தி'யும், குமாரபாளையம் எக்ஸல் குழும கல்வி நிறுவனமும் இணைந்து நடத்தும் 'வெற்றி நிச்சயம்' வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஈரோடு பஸ்நிலையம் அருகில் உள்ள மல்லிகை அரங்கில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைக்கிறார்.

ஈரோடு

'தினத்தந்தி'யும், குமாரபாளையம் எக்ஸல் குழும கல்வி நிறுவனமும் இணைந்து நடத்தும் 'வெற்றி நிச்சயம்' வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஈரோடு பஸ்நிலையம் அருகில் உள்ள மல்லிகை அரங்கில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைக்கிறார்.

'வெற்றி நிச்சயம்'

பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மாணவ- மாணவிகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி என்பதை அவர்களே அறிந்து கொள்வதற்கு வசதியாக 'வெற்றி நிச்சயம்' என்ற சிறப்புமிக்க வழிகாட்டுதல் நிகழ்ச்சியை 'தினத்தந்தி' நாளிதழ் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

கடந்த 19 ஆண்டுகளாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்ற 'வெற்றி நிச்சயம்' நிகழ்ச்சி, தற்போது 20-வது ஆண்டாக தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அனுமதி இலவசம்

ஈரோடு மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி குமாரபாளையம் எக்ஸல் குழும கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ- மாணவிகள் காலை 7 மணியில் இருந்தே தங்கள் பெயர்களை நேரில் பதிவு செய்து நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

மதிய உணவு

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகள் அனைவருக்கும் எழுதுவதற்கு ஒரு பேனா, பேடு ஆகியவற்றுடன் அழகிய போல்டர் இலவசமாக வழங்கப்படும். மதியம் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும். காலையிலும், மாலையிலும் தேநீர், பிஸ்கெட் இலவசமாக வழங்கப்படும்.

கலெக்டர் தொடங்கி வைக்கிறார்

இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியை நாளை மறுநாள் காலை 9 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றுகிறார். குமாரபாளையம் எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் தலைவருமான முனைவர் ஏ.கே.நடேசன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றுகிறார்.

கல்விப்பணியில் 'தினத்தந்தி' என்ற தலைப்பில் 'தினத்தந்தி' தலைமை பொது மேலாளர் (புரமோசன்ஸ்) ர.தனஞ்செயன் உரையாற்றுகிறார்.

மருத்துவம், பொறியியல்

இதையடுத்து பலதுறை வல்லுனர்கள் உரையாற்றுகிறார்கள். மருத்துவ துறை மற்றும் நீட் நுழைவுத்தேர்வு குறித்து குமாரபாளையம் எக்ஸல் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி முதல்வர் கே.விபாஸ் பேசுகிறார். பொறியியல் துறை குறித்து குமாரபாளையம் எக்ஸல் என்ஜினீயரிங் கல்லூரி (தன்னாட்சி) நிர்வாக இயக்குனர் கே.பொம்மண்ணராஜா உரையாற்றுகிறார்.

மத்திய -மாநில அரசுகள் நடத்தும் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டித்தேர்வுகள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் கோவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை துணை இயக்குனர் எம்.கருணாகரன் பேசுகிறார்.

கல்விப்பணியில் எக்ஸல் கல்லூரிகள் என்ற தலைப்பில் குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள், மேச்சேரி தி காவேரி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவரும், செயலாளருமான டாக்டர் என்.மதன் கார்த்திக் பேசுகிறார்.

சட்டம்-பட்டய கணக்கியல்

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சட்டத்துறை குறித்து சேலத்தை சேர்ந்த சட்ட கல்வியாளர் வக்கீல் பி.ஆர்.ஜெயராஜன் பேசுகிறார். பட்டய கணக்கியல் துறை குறித்து மதுரையை சேர்ந்த சார்டர்டு அக்கவுண்டன்ட் டி.தவமணி பேசுகிறார்.

துணை மருத்துவத்துறை குறித்து குமாரபாளையம் எக்ஸல் பிசியோதெரபி அன்டு சுகாதார அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.அய்யப்பன் பேசுகிறார். பாலிடெக்னிக் கல்லூரிகள் குறித்து எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை தலைவர் எம்.ஸ்ரீகாந்த் பேசுகிறார்.

கலை மற்றும் அறிவியில் அன்டு கல்வியியல் குறித்து எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் ஆர்.விமல் நிஷாந்த் பேசுகிறார். முன்னதாக எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில் நுட்ப இயக்குனர் என்.செங்கோட்டையன் வரவேற்று பேசுகிறார். முடிவில் ஈரோடு தினத்தந்தி மேலாளர் ஆர்.சுந்தர் நன்றி கூறுகிறார்.

நிகழ்ச்சியை மதுரையை சேர்ந்த புலவர் வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்குகிறார். உணவு இடைவேளையின் போது நன்னிலம் கேசவனின் பலகுரல் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

'தினத்தந்தி' பதிப்பகம்

'தினத்தந்தி' பதிப்பக புத்தகங்கள் 'வெற்றி நிச்சயம்' அரங்கில் மட்டும் சலுகை விலையில் கிடைக்கும்.


Next Story