தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
![தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/20/1460449-madurai.webp)
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சூழல் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், ராஜபாளையம்.
குடிநீர் தட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உட்பட்ட ஒருசில கிராமப்புற பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் அடிப்படை தேவைகளுக்கு பொதுமக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான வினியோகத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூா்.
பயணிகள் அவதி
விருதுநகர் பஸ் நிலையத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொம்ைமயப்பன், விருதுநகர்.
சேதமடைந்த மின்கம்பங்கள்
விருதுநகர் மாவட்டம் ஆத்திபட்டி கிராமம் நாரணாபுரம் பகுதியில் வீதிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாண்டி, ஆத்திபட்டி.
அடிப்படை வசதிகள் தேவை
விருதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-துநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா லட்சுமிபுரம் புதூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. எனவே இந்த அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், லட்சுமிபுரம்.