குடிநீர் குழாய் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்


குடிநீர் குழாய் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்
x

குடிநீர் குழாய் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சி மதுரை சாலையில் குடிநீர் குழாய் அருகே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு வந்தது. குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என நேற்று முன்தினம் 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அப்பகுதியில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகள் அனைத்தும் நேற்று அகற்றப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story