பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: அண்ணனை தாக்கியதாக பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு


பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: அண்ணனை தாக்கியதாக பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
x

பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறில் அண்ணனை தாக்கியதாக பெண் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே உள்ள வாளறமாணிக்கம் அடுத்துள்ள நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 52). இவரது தங்கை அற்புதவள்ளி. இவருடைய மகன் ராமநாதன். இவர்கள் இடையன்வயல் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் முத்துராமலிங்கத்திற்கும், அற்புதவள்ளிக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தங்கை அற்புதவள்ளியிடம் பணம் கேட்க முத்துராமலிங்கம் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அற்புதவள்ளி தனது மகன் ராமநாதனுடன் சேர்ந்து முத்துராமலிங்கத்தை தாக்கி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீசார் அற்புதவள்ளி, ராமநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story