கள்ளக்காதலனுடன் தகராறு:பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை

கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெகமம்
கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்காதல்
கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் அசோக் (வயது 33). இவருடைய மனைவி சவுடேஸ்வரி (30) இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. தற்ேபாது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. அசோக்கும், சவுடேஸ்வரியும் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனா. அதே தொழிற்சாலையில் திண்டுக்கல்லை சேர்ந்த திருமணமான முத்துப்பாண்டி (32) என்பவரும் தொழிலாளியாக வேலை செய்தார். அப்போது. முத்துப்பாண்டிக்கும், சவுடேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் கணவர் அசோக்குக்கு தெரியவந்தது. அதனால் அவர் மனைவியை கண்டித்தார். எனினும் சவுடேஸ்வரி தொடர்ந்து முத்துப்பாண்டியை சந்தித்து வந்ததோடு உல்லாசமாக இருந்து உள்ளார்.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்
இந்தநிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு முத்துப்பாண்டியும், சவுடேஸ்வரியும் திண்டுக்கல் சென்று குடும்பம் நடத்தி வந்தனர். பின்பு கடந்த ஒரு மாதத்திற்கு முன் நெகமம் அருகே கக்கடவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து உள்ளனர்.
பின்னர் அந்தப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து உள்ளனர். இந்தநிலையில் முத்துப்பாண்டி அடிக்கடி மது குடித்து விட்டு வந்து சவுடேஸ்வரியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
தற்கொலை
இதனால் சவுடேஸ்வரி வாழ்க்கையில் ெவறுப்படைந்து காணப்பட்டார். முத்துப்பாண்டி வெளியே சென்றவுடன் தான் தங்கியிருந்த வீட்டில் சவுடேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் நெகமம் போலீசார் அங்கு சென்று, சவுடேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






