பெயிண்டரிடம் தகராறு; 2 பேர் கைது


பெயிண்டரிடம் தகராறு; 2 பேர் கைது
x

பெயிண்டரிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுடலைமணி மகன் சிவக்குமார் (வயது 23). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), முத்துசெல்வம் (20) ஆகியோர் சிவக்குமாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவக்குமார் சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், முத்துசெல்வம் ஆகியோரை கைது செய்தனர்.

1 More update

Next Story