மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானையில் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பலகட்ட போராட்டங்களுக்கு பின்னரும் வறட்சி நிவாரணம் வழங்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே வருகிற 15-ந் தேதிக்குள் வறட்சி நிவாரணம், பயிர் காப்பீடு வழங்காவிட்டால் வருகிற 19-ந் தேதி திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





