மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்


மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்
x

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் வருகிற 9-ந்தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது.

சிவகங்கை

சிவகங்கை

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் வருகிற 9-ந்தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது.

கலைப்போட்டிகள்

சிவகங்கை மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட மாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்த அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 9-ந்தேதி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 போட்டிகள் காலை 9 மணி முதல் நடைபெறும் போட்டியில் குழுவாக பங்கு பெற அனுமதியில்லை. தனி நபராக அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.

கரகாட்டம்

குரலிசை போட்டியிலும் நாதசுவரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின் கிதார், சாக்சபோன், கிளாரினெட், தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பராம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஒவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஓவியத்தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் www.artandculture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பெறலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story