மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள்


மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள்
x

திண்டுக்கல் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், குயின்சிட்டி ரோட்டரி சங்கம், மாவட்ட கால்பந்து கழகம் ஆகியவை சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தார்.


இதில் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெயச்சந்திரன், குயின்சிட்டி ரோட்டரி சங்க தலைவி சர்மிளா பாலகுரு ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமாமேரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 21 பள்ளிகளின் 400 மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.


இந்த 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு மொத்த பரிசுத்தொகை ரூ.25 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் மேற்கு ரோட்டரி சங்க செயலாளர் ராஜகோபாலன், குயின்சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் மல்லிகா மற்றும் உறுப்பினர்கள், கால்பந்து கழக பொறுப்பாளர்கள் கலைச்செல்வன், ஈசாக், தங்கத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story