தீவனூர்லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம்திரளான பக்தர்கள் தரிசனம்


தீவனூர்லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம்திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாிசனம் செய்தனா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் வட்டம் தீவனூர் கிராமத்தில் ஆதிநாராயண பெருமாள் என்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த புராதன கற்கோவிலில் அமர்ந்து அருள்பாலித்து வரும் பெருமாளுக்கு மாதந்தோறும் திருவோண தீபம் ஏற்றப்படும். அதன்படி மார்கழி மாதத்திற்கான திருவோண தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு லட்சுமி நாராயண பெருமாளுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தீபத்தையொட்டி பெருமாள் வெள்ளிகவசம் அணிந்து மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி பவனியாக கோவில் முன்புள்ள 32 அடி உயர கல்ஸ்தூபியின் அருகே கொண்டு வரப்பட்டார். மாலை 6.30 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் முன்னிலையில் கல் ஸ்தூபியில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு சுற்றியிருந்த திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் நாமக்காரர் முனுசாமி கவுண்டர் செய்திருந்தார்.

1 More update

Next Story