தீபாவளி பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது...!


தீபாவளி பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது...!
x
தினத்தந்தி 12 July 2023 3:25 AM GMT (Updated: 12 July 2023 3:42 AM GMT)

முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

சென்னை,

தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் 9-ம் தேதி சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த டிக்கெட்களை ரெயில்வே நிலையங்கள், ஐஆர்சிடிசி செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 13 தேதி முதலும், நவம்பர் 11ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 14 முதலும், நவம்பர் 12ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 15 முதலும் பயணிகள் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 9ம் தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில், சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் மற்றும் திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரெயில்களில் படுக்கை டிக்கெட்கள் விற்று தீர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமை முதலே பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும் எனத் தெரிகிறது. கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story