தி.மு.க. இளைஞரணி கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு


தி.மு.க. இளைஞரணி  கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு
x
தினத்தந்தி 4 Sep 2023 6:45 PM GMT (Updated: 4 Sep 2023 6:47 PM GMT)

தென்காசியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தென்காசி

தென்காசியில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு கூட்டம்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) தென்காசி வருகிறார். தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறார்.

பின்னர் தென்காசி சிவந்தி நகரில் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா, இசக்கி மஹால் வளாகத்தில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், அதனை தொடர்ந்து இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அமைச்சர் ஆய்வு

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மதுரைக்கு செல்கிறார். இதற்காக இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் இளைஞர் அணியினர் மற்றும் கட்சியின் முன்னோடிகள் மழை பெய்தால் பாதுகாப்பாக இருக்கும் அளவில் பிளாஸ்டிக் ஷெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வு செய்து அனைவரும் வசதியாக இருக்கும் அளவில் நடைபெறும் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது தனுஷ்குமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் பூங்கோதை, திமு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story