திமுக-நாம் தமிழர் கட்சியினர் மோதல் - இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு


திமுக-நாம் தமிழர் கட்சியினர் மோதல் - இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு
x

திமுக-நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. 25-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்பொழுது திடீரென திமுக-நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள்,பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர், திமுகவை சேர்ந்த 4 பேர், மற்றும் 3 போலீசார் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர். மோதலையடுத்து அந்த பகுதியில் துணை ராணுவப் படையினர், போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் திமுக-நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு கட்சியினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story