வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி


வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி
x

வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வேலூர்

வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பேரூராட்சி கவுன்சிலர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா நேதாஜிநகரை சேர்ந்தவர் பிரேமா (வயது 42). பள்ளிகொண்டா பேரூராட்சி 9-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர். இவரது கணவர் ஹரி (52). இவர் 10-வது வார்டு தி.மு.க. செயலாளர்.

இவர் காட்பாடியில் நேற்று முன்தினம் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டுக்கு நண்பருடன் மோட்டார்சைக்கிளில் திரும்பினார். மேல்மொணவூர் அருகே இரவு 9 மணி அளவில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக மோட்டார்சைக்கிளை நிறுத்தி, சர்வீஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவரது பின்னால் கருகம்புத்தூரை சேர்ந்த மணி (24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் ஹரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஹரி, மணி இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிகிச்சை பலனின்றி பலி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரி மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணியும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story