ராமேசுவரத்தில் இறந்த அரியானா பக்தர் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்ற த.மு.மு.க.வினர்


ராமேசுவரத்தில் இறந்த அரியானா பக்தர் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்ற த.மு.மு.க.வினர்
x

ராமேசுவரத்தில் இறந்த அரியானா பக்தர் உடலை சொந்த ஊருக்கு த.மு.மு.க.வினர் எடுத்து சென்றனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

அரியானா மாநிலம் மகேந்திரகர்வ் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 70), துர்கா தேவி (65) மற்றும் அவரது மகன் ஆகியோர் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி துர்கா தேவி திடீரென இறந்தார். அவரது உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது அதன் பிறகு அவரது உடலை அரியானா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக அந்த குடும்பத்தினர் பல்வேறு முயற்சி மேற்கொண்டனர். அரியானா செல்வதற்கு எந்த ஆம்புலன்சுகளும் முன்வரவில்லை.

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியை சேர்ந்தவர்கள் த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கானை தொடர்பு கொண்டால் தேவையான வசதிகளை செய்து தருவார் என கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த குடும்பத்தினர் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வசதி செய்து தர கேட்டு கொண்டனர். மாவட்ட தலைவர் இப்ராஹிம், மருத்துவ சேவை அணி செயலாளர் தாஜுதீன், மற்றும் நிர்வாகிகள் அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இதை தொடர்ந்து த.மு.மு.க. ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கர் என்பவர் துர்காதேவி உடலை சுமார் 2850 கி.மீ. தூரத்தை பயணம் மேற்கொண்டு அவரது சொந்த ஊரில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலீமுல்லாஹ்கான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மருத்துவ சேவை அணியினர் உள்ளிட்ட அனைவரையும் ம.ம.க. மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பாராட்டினார்.


Related Tags :
Next Story