தோல் நோயுடன் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள்


அன்னவாசல், இலுப்பூரில் தோல் நோயுடன் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

தெரு நாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், இலுப்பூர், காலாடிப்பட்டி சத்திரம், முக்கண்ணாமலைப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து விட்டது. வீதிகள் மற்றும் நடுரோட்டில் படுத்துக்கொள்வதால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்வோரை கடிப்பது, குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக்கடை மற்றும் குப்பை தொட்டியில் உணவைதேடி அங்கும், இங்குமாக செல்கின்றன.

குறிப்பாக, கூட்டமாக சேரும் நாய்கள் திடீரென்று சாலையின் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் பலர் அலறியடித்து ஓடுகின்றனர். எனவே, தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தோல் நோய்

அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சமீப காலமாக நாய்களின் முடிகள் உதிர்ந்து தோலில் புண் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு சில நாய்கள் கடைவீதி, குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. இதனால் இந்த நோய் மற்ற நாய்களுக்கும் பரவி வருகிறது.

எனவே நோய் பாதிப்புள்ள நாய்களால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நாய்களுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தெருவில் விடப்படும் நாய்கள்

இலுப்பூரை சேர்ந்த சரவணக்குமார்:- பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் நாய் வளர்க்கிறோம் என்று கூறி சில மாதங்கள் வரை அதனை வளர்த்து விட்டு பின்னர் தெருவில் விட்டு விடுகிறார்கள். இவ்வாறு தெருவில் விடப்படும் நாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் வெறிநாயாக அலைகின்றன. பின்னர் தெருவில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மனிதர்கள், கோழி, ஆடு, மாடுகளை கடிக்கின்றது. எனவே நாய்களை வளர்க்க ஆசைப்படுபவர்கள் அதனை முறையாக பராமரித்தாலே தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம்.

கீழே விழுந்து காயம்

அன்னவாசலை சேர்ந்த அப்துல்ரகுமான்:- அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்திக் கொண்டு வருகிறது. இதனால் சிலர் பீதியில் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

சிகிச்சை அளிக்க வேண்டும்


Next Story