திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்


திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

திருச்சி

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம்-மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண்:1,2,3 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மின்வினியோகம் இருக்காது. இதனால், நாளை (வெள்ளிக்கிழமை) குடிநீர் வினியோகம் திருச்சி மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் இருக்காது. எனவே பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story