மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Jun 2023 7:04 PM GMT (Updated: 20 Jun 2023 6:44 AM GMT)

திசையன்விளை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே கீரைக்காரன்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வ இசக்கி. இவருடைய மகன் பால இசக்கி (வயது 22). மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். சென்னையில் டிரைவராக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் நேற்று திசையன்விளை - குமாரபுரம் சாலையில் உள்ள பாலத்தின் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டதாக அவரது சகோதரிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளளார். உறவினர்கள் அவரை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சைக்கு பின்பு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story