டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பாணாவரம் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

பாணாவரத்தை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முகலியப்பன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 21), வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஈஸ்வரன் தூக்குப்போட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள், ஈஸ்வரனை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story