பறக்கை அருகே கடன் தொல்லையால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை


பறக்கை அருகே கடன் தொல்லையால்                            டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
x

பறக்கை அருகே கடன் தொல்லையால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

பறக்கை அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 35), டிரைவர். இவருடைய மனைவி முருகலதா. சண்முகராஜ் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவருடைய வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி முருகலதா சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story