மோகனூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


மோகனூர் அருகே  டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மோகனூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே லத்துவாடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 35). டிரைவர். இவருடைய மனைவி விஸ்லானி (28). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளாள்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த வெங்கடாசலம், மனைவி விஸ்லானி வேலைக்கு சென்ற பின் வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற மோனூர் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் போலீசார் இறந்த வெங்கடாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story