விஷம் குடித்து டிரைவர் தற்கொலை


விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
x

விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை அருகே உள்ள கம்பர் நத்தம் கிராமம், மேல தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் பேச்சிமுத்து (வயது24). டிரைவர். சம்பவத்தன்று பேச்சிமுத்து குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய வீட்டிற்கு பின்புறம் உள்ள வயலில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேச்சிமுத்துவின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story