மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய 27 சிறுவர்கள் சிக்கினர் மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்


மாவட்டத்தில்    இருசக்கர வாகனம் ஓட்டிய  27 சிறுவர்கள் சிக்கினர்  மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய 27 சிறுவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிய 27 சிறுவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

27 சிறுவர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த 18 வயது நிரம்பாத சிறுவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 சிறுவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

அறிவுரை

தொடர்ந்து அந்த சிறுவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்து அறிவுரை வழங்கினார். அப்போது, 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவது 199 (ஏ)-ன் படி குற்றமாகும். மீறினால் இளஞ்சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. வாகனம் ஒரு வருட காலம் சிறை பிடிக்கப்படும். பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும், 3 வாரம் முதல் 3 மாதம் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஆகையால் சிறுவர்கள் வாகனங்களை இயக்க பெற்றோர் அனுமதிக்க கூடாது, என்று அறிவுறுத்தினார்.


Next Story