மினி லாரி மோதி, மேளக்கலைஞர் பலி

மினி லாரி மோதி, மேளக்கலைஞர் பலியானார்.
நெல்லை பழையபேட்டை அழகப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கணேசன் (வயது 21). செண்டை மேளக்கலைஞரான இவர் தசரா திருவிழாவையொட்டி மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணேசன் பழையபேட்டை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி மோதியதில் அவர் பலியானார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து, மினி லாரி டிரைவர் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (35) என்பவரை கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





