மது போதையில் தவறி விழுந்த டிரைவர் சாவு


மது போதையில் தவறி விழுந்த டிரைவர் சாவு
x

மது போதையில் தவறி விழுந்த டிரைவர் சாவு

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறை பல்ப்பநாபன் புதூர் பகுதியை சேர்ந்தவர் வேதமணி (வயது 55), டிம்போ டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் இவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேதமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி லில்லி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story