மதுபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து தொழிலாளி சாவு


மதுபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து தொழிலாளி இறந்தார்

சிவகங்கை

காரைக்குடி

சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயல் கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 52). தொழிலாளி. இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து கழிவுநீரில் மூழ்கி விட்டார். அதை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story