குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை-போலீசார் விசாரணை


குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:45 PM GMT)

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கட்டிட தொழிலாளி

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மேனகா (22). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் விமல்ராஜின் சகோதரியை கேரளாவில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கர்ப்பிணியான அவருக்கு வளைகாப்பு முடிந்ததும், வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று விமல்ராஜ், தனது மனைவியிடம் கூறி உள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக விமல்ராஜின் தந்தை ரங்கசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். மேலும் விமல்ராஜ் ஒரு அறையில் தூங்கியதாக தெரிகிறது. இதற்கிடையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இதையடுத்து கண் விழித்து பார்த்த போது குழந்தை மட்டும் தொட்டில் இருந்து உள்ளது. ஆனால் மேனகாவை காணவில்லை.

சப்-கலெக்டர் விசாரணை

மேலும் மற்றொரு அறையின் கதவை தட்டி பார்த்தும் திறக்காததால், விட்டத்தின் வழியாக அறைக்குள் பார்த்த போது மேனகா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மேனகா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் மட்டும் ஆவதால் சப்-கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story