மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு


மழை குறைந்ததால்  முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
x

மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது

தேனி

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, தி்ண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் கன மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் இன்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 993 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர்மட்டம் 136 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 366 கனஅடியாகவும் இருந்தது. இதற்கிடையே அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் லோயர்கேம்பில் உள்ள நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு மின் உற்பத்திக்காக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும். நேற்று வரை அணையில் இருந்து வினாடிக்கு 1,866 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தண்ணீர் திறப்பு குறைந்ததால் 3, 4-வது ஜெனரேட்டரில் மட்டும் தலா 42 வீதம் 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


Next Story