எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x

சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை.


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. அ.தி.மு.க.வும் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நாளை நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் மத்தியில் விரிவாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அறிவிப்பை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வெளியிட உள்ளனர். இதன்மூலம் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story