விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜானந்த பத்மநாபன்(வயது 60). இவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக தற்காலிகமாக பணியாற்றி வந்தார். மேலும் கடந்த சில மாதங்களாக இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு, அவரது உறவினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story